திருவாரூர், செப்.27: திருவாரூர் மாவட்டத்தில் 10 பேருகளுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு புகார் பெட்டி அமைத்திட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சகி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் டிஆர்ஓ சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ஜோஸ்மின் சகாயா பிரமிளா, ஆர்டிஓ கீர்த்தனா மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பெண்கள் தொடர்பான பாதுகாப்பு புகார் பெட்டியினை அலுவலர்களிடம் வழங்கி கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பேசுகையில் தனியார் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையினால் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் அதிலிருந்து மீண்டு வாழ சுகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் உளவியல் சட்டம் சார்ந்த ஆலோசனைகளும், சேவைகளும் வழங்கப்படுவதுடன் தேவைப்படும் பட்சத்தில் போலீசார் உதவி, மருத்துவ உதவி மற்றும் சட்ட உதவிகளும்வழங்கப்படும்.