திருவாரூர்,செப்.27: 20 சதவீத போனஸ் வழங்கிட கோரி கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவிகித போனஸ் தொகையும், 5 சதவிகித கருணை தொகையும் வழங்கிட வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தினை தனித்துறையாக உருவாக்கிட வேண்டும். பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக ஊதிய ஒப்பந்தம் செய்திட வேண்டும்.
பண்டிகை கால முன்பணத்தினை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.