திருவிடைமருதூர், செப்.27: திருவிடைமருதூர் அடுத்துள்ள நாச்சியார்கோவில் பாரதியார் நகரில் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் கபடி விளையாடினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.