தஞ்சாவூரில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் திருச்சிக்கு அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் செப். 27: தஞ்சாவூரில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் திருவள்ளூர், கோயம் புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டுவருகின்றன.

இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,000 டன் நெல் 240 லாரிகளில் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: