திருச்சி, செப்.27: திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்று தொடங்கியது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.43 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு ரூ.3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.