ராமநாதபுரம்,செப்.27: ராமநாதபுரத்தில் ஒரே கோரிக்கை தொடர்பான மனு மீண்டும், மீண்டும் வருவதை தவிர்க்க தீர்வு காணப்படாத மனுக்களுக்கு உரிய காரணத்தை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார். ராமநாதபுரத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 296 மனுக்கள் பெற்று கொண்டார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்கள் தொடர்பாக மனுதாரரின் முன்னிலையில் விசாரித்தார்.