சேலம், செப். 24: சேலம் மாவட்டத்தில் 38வது தவணையாக 2,690 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (25ம்தேதி) நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் 60,25,127 பேருக்கு முதல் தவணையும், 2ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் 97சதவீதம் பேருக்கு முதல் தவணை, 89 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,49,268 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.