திருச்செங்கோடு, செப்.24: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் மாணவர்கள் இருவரை, அதே பகுதியைச் சேர்ந்த வணிகர் சங்க தலைவர் தங்கமணி, அவரது மகன் பூபாலன் மற்றும் நண்பர் சேகர் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வாரம் ஆகியும் அவர்களை கைது செய்யாததை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவையினர் பெரியமணலி நான்குரோடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.