1126 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(25ம் தேதி) 1126 மையங்களில் மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை 1126  மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோன தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில், காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 18 முதல் 59 வயதிற்குபட்ட நபர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை வரும் 30ம் தேதி வரை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: