திருவள்ளூர், செப்.24: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் சா.கண்ணன் மேற்பார்வையில், திருமழிசை பேரூராட்சியின் எல்லைக்குட்பட்ட மடவிளாகம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கீதா உணவு விடுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் ஒழிப்பு பணி குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கண்டுபிடித்து 35 கிலோ அளவில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தார்.