காஞ்சிபுரம் செப். 24: காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் நாய்களால் பெரும் மச்சம் அடைந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர் மையம் மற்றும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவித்து தொடங்கியது. துவக்க விழாவில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இதன் செயல்பாட்டை ஆய்வு செய்யும் வகையில் தனது தொலைபேசியில் இருந்து கட்டணமில்லா தொலைபேசி எண் புகார் தெரிவிக்க அழைத்து, அங்குள்ள ஊழியர் குறைகளை கேட்டார்.