சூலூர், செப். 24: கோவை எம்பி பி.ஆர். நடராஜன் சூலூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் உள்ள சூலூர், இருகூர், கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். அரசு மின் கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.