பெ.நா.பாளையம்.செப் 24: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கேஸ் கம்பனி இலட்சுமி திருமண மண்டபத்தில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், தமிழ்ஆர்வலர்கள் பங்கேற்கிறார்கள். கோவை தமிழ்ச்சங்கமம், தமிழ்க்காப்புக் கூட்டியக்கம் சார்பில் நடைபெறும் மாநாடு நாளை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.வெளிநாடு, வெளி மாநிலம், தமிழ்நாடு உட்பட பல இடங்களில் இருந்து சுமார் 4000 தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் நடத்தப்பட்ட 85 இணைய வழிக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைப் பேச்சாளர்கள் பேசுகின்றனர்.