கோவை, செப்.24: அத்லடிக்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 17வது தேசிய யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப்க்கான தடகள போட்டி மத்திய பிரதேசம் போபால் பகுதியில் உள்ள டிடி நகர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், டெக்கல்தான் பிரிவில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் அரவிந்த் பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடந்த டெக்கத்லான் போட்டில் மொத்தம் 5392 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். மாணவர் அரவிந்த் கூறியதாவது: கடந்த பல வருடங்களாக தடகளத்தில் பயிற்சி பெற்று வருகிறேன்.