ஈரோடு, செப். 24: ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலையில் காவல் துறையினர், அங்குள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, கேர்மாளத்தை அடுத்துள்ள அத்தியூர் பகுதியைச் சேர்ந்த மாதன், தனது விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 496 கஞ்சா செடிகளை அவர் பயிரிட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, கடம்பூர் போலீசார் மாதன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.