திருச்சி, செப்,24: திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் கடந்த 9 .8 .22 தேதி டிபன் கடை நடத்தி வரும் ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருப்பதாக பெறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதன் (40 )என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சாமிநாதன் மீது காரில் ஒருவரை கடத்தி, பணம் மற்றும் செல்போன் பறித்த ஒரு வழக்கு உட்பட 6 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அருகில் கடந்த 20.8.22 ம் தேதி அன்று ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை,பணம் மற்றும் செல்போன் பறித்ததாக அரவிந்த் என்கின்ற ஜம்பார் (20) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.