வந்தவாசி, செப்.24: வந்தவாசி அடுத்த கொடநல்லூர் கிராமத்தில் மாமனார், மாமியாரை தாக்கிய மருமகள் உள்ளிட்ட 7 பேரை போலிசார் வலை வீசிதேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த கொடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் வினோத்குமார்(22). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகள் பிரேமா(19) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக திருமணம் நடந்தது. கடந்த 21ம் தேதி அன்று பிரேமாவுக்கும் வினோத்குமாருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பிரேமா வினோத்குமாரை தாக்கினாராம். இதனை அறிந்த வினோத்குமாரின் தாய் விமலா என் கண் முன்னே என் மகனை தாக்குகிறாயே என கண்டித்துள்ளார்.