மாடியில் இருந்து விழுந்த முதியவர் பலி

கேடிசி நகர், செப். 24: நெல்லை அருகே சங்கர்நகர், வாஞ்சிநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(75). இவர் சில நாட்களுக்கு முன்பு மாடியிலிருந்து தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: