ஆட்டோ மோதி முதியவர் பலி

கேடிசி நகர், செப். 24: மேலப்பாளையம்,  குறிச்சி முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி (60). இவர்  பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை  இசக்கி குறிச்சி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ மோதியது. இதில்  படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதுகுறித்து நெல்லை  மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: