நெல்லை அருகே காரில் கடத்திய 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை, செப். 24: நெல்லை அருகே 750 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூடைகளை காரில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, எஸ்ஐ மகேஸ்வரன் மற்றும் போலீசார் ஆகியோர் மதுரை முதல் குமரி வரையிலுள்ள நான்குவழிச்சாலை பொட்டல் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை போலீசார் ேசாதனையிட்டனர். இதில் 750 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூடைகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நெல்லை அருகேயுள்ள சங்கர்நகர் ராம்நகரை சேர்ந்த கார் உரிமையாளர் ரகுபதி (21), இவரின் உதவியாளரும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 750 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: