நெல்லிக்குப்பம், செப். 24: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் மற்றும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சிவலிங்கத்திற்கும் நந்தீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நந்தீஸ்வர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தம்பதியர்களாக கோயில் உள் பிரகாரம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.