திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்; நாளை காலை 8 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், நாளை காலை 8 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் கவனத்திற்கு நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் 10,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

* காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈசிஆர் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

* மாலை 3 மணி முதல் ஊர்வலம் பிபி-டாப்பை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ.வி.ஆர் சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

* ஊர்வலம் மூலகொத்தலம் பகுதியை அடைந்த உடன் பிபி-டாப்-ல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை சாலை மற்றும் ஈ.வி.ஆர் சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின்பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.

* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதிபாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும் போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும் போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயணகுரு சாலை வழியாக செல்லலாம்.

* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும் போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

வேளச்சேரி உள்வட்ட சாலையில்...

வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை அதிகாலை 2 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி  சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்ட சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி  நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்சைன் பள்ளி அருகில் வலது  புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்வட்டச் சாலை வழியாக சென்று  மேம்பாலத்தின் கீழ்வழியாக வலது புறம் திரும்பி கைவேலி சந்திப்பில் ‘யூ’ டர்ன் எடுத்து ரயில்வே மேம்பாலம் வழியாக தங்கள் இலக்கைச் சென்றடையலாம். விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி  உள்வட்ட சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் ‘யூ’ டர்ன் எடுத்து  வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

Related Stories: