×

போலி கஸ்டமர் கேர் எண் மூலம் ரூ.2.71 லட்சம் மோசடி

சிவகங்கை, செப்.23: காரைக்குடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(79). இவர் தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த வாரம் இந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை தெரிந்து கொள்வதற்காக கூகுளில் தேடியுள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட வங்கி கஸ்டமர் கேர் எண் என்ற பெயரில் ஒரு எண் இருந்துள்ளது. அதற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர் பழனியப்பனிடம் அனைத்து விபரங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகு நான்கு நாட்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 13 தவணைகளில் ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 299 பணம் எடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் கேட்டபோது, அது வங்கி கஸ்டமர் கேர் எண் இல்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் பழனியப்பன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நர்மதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...