×

வேலை வாங்கி தருவதாக ரூ.3.40 லட்சம் மோசடி

ராமநாதபுரம், செப்.23: கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்தவர் வீராச்சாமி(40). தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியர். இவரது நண்பர் பேரையூர் ரமேஷ். இவர் மூலம் பரமக்குடி பிரபாகரன், இவரது மனைவி இந்துமதி, சொர்ணகுமார், ஆல்பிரட் பிராங்ளின் ஆகியோர் வீராச்சாமிக்கு நண்பர்களாகினர். இந்நிலையில் மின் வாரியத்தில் வீராச்சாமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.40 லட்சத்தை பெற்றுக்கொண்டனர். பணி நியமன போலி ஆணை தயாரித்து கூரியர் தபாலில் அனுப்பினர். பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் நம்பிக்கை மோடி செய்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரையிடம் வீராச்சாமி புகாரளித்தார்.பிரபாகரன், இவரது மனைவி இந்துமதி, சொர்ணகுமார், ஆர்பர்ட் பிராங்ளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...