பரமத்திவேலூர், செப்.23:பரமத்திவேலூரை அடுத்துள்ள எல்லமேடு அருகே உள்ளது மங்கலமேடு. இப்பகுதியில் நான்கு தெருக்களில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை பெயர்த்து விட்டு, ஜல்லிகள் கொட்டி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. சாலையில் ஜல்லிகள் கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இச்சாலையில் குடிநீர் இணைப்பிற்காக பறித்த குழிகளையும் ஓலப்பாளையம் ஊராட்சியினர் சரிவர மூடப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சியிடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்களே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி குழிகளை முடினர்.