திருப்பூர், செப். 23: நல்லூர் பகுதியியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நல்லூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் கடந்த 6 வருடங்களாக பணியாற்றும் பாண்டு என்பவரிடம் தீபாவளி பண்டு சீட்டு பணம் செலுத்தி வருகிறோம். கடந்த 5 வருடங்களாக நாங்கள் கட்டிய பணத்தை தீபாவளிக்கு முன்பு அனைவருக்கும் பிரித்து கொடுத்து விடுவார்.