திருச்சி, செப்.23: திருச்சி மாவட்டத்தில் 2022 ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடிக்கு 30.11.2022 வரை விண்ணப்பித்து பிரீமியம் தொகையாக வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2078 அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.