வேலூர், செப்.22: வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை விட அதிகமாக புதிதாக மரங்களை நட்டு, வளர்க்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் பரிக்கப்பட்டு, ராணிப்பேட்டை புதிய கோட்டம் உருவாக்கப்பட்டது.