திருச்சி, செப்.22: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. மழை காலங்களில் பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டியுள்ளது.
இந்த நிலையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் மாநகரில் நேற்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் உறையூர் பாண்டமங்கலம், காந்திபுரம் தேவர் காலனியில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது.