நெல்லையில் இரவில் வயல் பகுதியில் தீவிபத்து
நெல்லை, செப். 22: நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை பகுதியில் உள்ள வயல் வெளியில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி எரிந்தது. வயல்களில் நடுவு பணி எதுவும் நடைபெறாத நிலையில் அங்கு வளர்ந்து காய்ந்திருந்த புல் மற்றும் செடிகள் பற்றி எரிந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் வெளியேறியது. தகவல் அறிந்ததும் பாளை தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் காந்தி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.