பர்கிட்மாநகரில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

நெல்லை, செப்.22: பர்கிட்மாநகரத்தில் பரவும் காய்ச்சலை தடுக்க விமன் இந்தியா மூமென்ட் மற்றும் எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விமன் இந்தியா மூமென்ட் மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பர்கிட்மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் டிடிடிஏ துவக்கப்பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் யாசின், பர்கிட் கிளை தலைவர் ஜுபைர் முகம்மது, விம் கிளை தலைவர் நௌரோஸ்பானு, செயலாளர் செய்யதலி பாத்திமா, நிர்வாகிகள் தௌலத்பஷீரால், அனீஸ் பாத்திமா, அலீமா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பர்கிட்மாநகர் விமன் இந்தியா மூமென்ட் கிளை மற்றும் மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.

Related Stories: