பொது மேலாளர் ஆய்வு

சேலம், செப். 22: சேலம் ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தார். திருப்பத்தூர்- ஈரோடு மார்க்கத்தில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா ஆய்வு செய்தார். அப்போது பொது மேலாளர் மல்லையா, சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர், அவர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம், எடைபார்க்கும் இயந்திரம், பார்சல் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.அப்போது, பாமக எம்எல்ஏ அருள், தமாகா நிர்வாகி சுசீந்திரகுமார் மற்றும் கருப்பூர் பகுதியைசேர்ந்த பொதுமக்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், சேலம்- சென்னை ரயில் பாதையில் உள்ள கருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதனை சீர் செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் கவுதம்ஸ்ரீனிவாஸ்,கோட்ட முதுநிலை வணிகமேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். சேலம் ரயில் நிலையத்தில் ஆய்வை முடித்து கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்துக்கு சென்றார்.

Related Stories: