2 குழந்தைகளின் தாய் மாயம்

சேந்தமங்கலம், செப்.22: எருமப்பட்டி அடுத்துள்ள முட்டாஞ்செட்டி ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (57). இவரது 2வது மகள் நித்யாவை(27), திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அப்பண்ணநல்லூரைச் சேர்ந்த சசிகுமாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு, நித்யா ஆவாரங்காட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அன்றிரவு வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு வெளியே சென்ற அவர், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேல், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை தேடி வருகின்றனர்.

Related Stories: