டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி

தர்மபுரி, செப்.22:  தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், நாளை(23ம் தேதி) டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தர்மபுரி மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி சர்வேயர் தேர்விற்கான 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (23ம் தேதி) தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10 மணி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/GCVWxWm என்ற கூகுல் படிவத்தில் விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: