ஊத்தங்கரை, செப்.22: ஊத்தங்கரையில் ஆசிரியரிடம் கைவரிசை காட்டி, ₹2.75 லட்சத்தை அபேஸ் செய்த திருப்பத்தூர் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முல்லைநகரை சேர்ந்தவர் ராமலிங்கம், ஆசிரியர். இவர் கடந்த ஜூன் 8ம் தேதி, ஊத்தங்கரையில் உள்ள வங்கி ஒன்றில் ₹2.75 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது டூவீலரில் வைத்து விட்டு ஆடிட்டர் ஆபீசுக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, டூவீலரில் வைத்திருந்த பணம் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊத்தங்கரை பகுதிகளில் பெண் ஒருவர் நூதன திருட்டில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.