கிருஷ்ணகிரி, செப்.22:பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) முதல்வர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-23ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத ஒரு சில இடங்களுக்கும், நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி சேர்க்கை வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மின்சார பணியாளர் தொழிற்பிரிவு 2 வருட தொழிற்பயிற்சி காலியாக உள்ள 2 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் உள்ளது. கணினி இயக்குநர் மற்றும் திட்ட உதவியாளர், உணவு தயாரித்தல் (பொது) ஒரு வருட பயிற்சி, அனைத்து பிரிவினருக்கும சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சி முடித்தவுடன் ஓசூரில் உள்ள முன்னனி நிறுவனங்களில் அப்ரண்டிஸ் பயிற்சி சம்பளத்துடன் பெற்றுத்தரப்படும். பயிற்சியின் போதே இன்பிளான்ட் டிரெயினிங் பெற்றுத்தரப்படும்.