அரவக்குறிச்சி, செப். 22: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். அவருக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி மாணவர்களிடையே அவர்களின் தமிழ்த்திறனை வளர்க்கும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10,000 இரண்டாம் பரிசு 7000 மூன்றாம் பரிசு 5000 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூபாய் 2000 என பல்வேறு வகையில் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.