திருப்பூர், செப்.22: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே 5 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் இலக்கியம் 7 இடங்களுக்கும், ஆங்கில இலக்கியம் 5 இடங்களுக்கும், கணினி பயன்பாட்டியல் 9 இடங்களுக்கும், கணினி அறிவியல் 10 இடங்களுக்கும், இயற்பியல் 4 இடங்களுக்கும், வரலாறு 5 இடங்களுக்கும், கணிதம் 26 இடங்களுக்கும் கலந்தாய்வு நாளை (23ம் தேதி) காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.