ஊட்டி, செப். 22: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி ரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சமி நில மீட்பு குழு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அதன் தலைவர் எமரால்டு சேகர், நீலகிரி எம்பிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு பல கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் தாட்கோ கடனுதவி பெற்றவர்களுக்கு கடன்கள் வழங்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கி மேலாளர்களும்,