கோவை, செப்.22: கோவை பீளமேடு எஸ்.டி.வி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (73). சரக்கு ஆட்டோ டிரைவர். சில நாட்களுக்கு முன் இவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.டி.வி நகர் வழியாக கிருஷ்ணகுமார் (50) என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். சரக்கு ஆட்டோ கார் பக்க கண்ணாடி மீது மோதியது. இதில் கோபமடைந்த கிருஷ்ணகுமார் வாக்குவாதம் செய்தார். கார் கண்ணாடி உடைந்ததிற்கான பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் சுப்ரமணியம் தர மறுத்து விட்டார்.