×

ஆனந்தூர் பகுதியில் இன்று மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம், செப்.22: ஆனந்தூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணியினால் ராதானூர்,எலிக்குளம், பணிக்கோட்டை, புளிச்சவயல், காரங்கோட்டை, வலனை, ஆனையார்கோட்டை, ராக்கினார்கோட்டை, விசவனூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் நிஷாக் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags : Anandur ,
× RELATED ரயில் மோதி மூதாட்டி பலி