×

ஆசிரியை சஸ்பெண்ட்

தொண்டி,செப்.22: தொண்டி அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டப்படாததால், தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொண்டி அருகே பாசிபட்டிணம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துலெட்சுமி.
இவர் மீது ஏகப்பட்ட புகார் இருந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் பாசிபட்டினம் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவே கூட்டப்பட வில்லை என தெரிகிறது. இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், முத்துலெட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...