பண்ணை வீட்டில் சூதாட்டிய 18 பேர் கைது

ஈரோடு, செப். 22: ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருங்கல்பாளையம், சாய்குரு நகர் பகுதியில், ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், சாய்குரு நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வந்த 4 கார்கள், 3 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: