பொன்னேரி, செப். 21: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூரில் உள்ள ஆதவன் அரிசியாலையில் 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை தனிப்படை வட்ட வழங்கள் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூரில் உள்ள ஆதவன் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் தனிப்படை அலுவலர் ஜெயச்சந்திரன், துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் குமார், காட்டூர் போலீசார் உதவியுடன் காட்டூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஆதவன் அரிசி ஆலையில் நேற்றுமுன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.