அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: கூலித்தொழிலாளி திடீர் சாவு

ஈரோடு, செப். 21: ஈரோட்டில் திடீரென உயிரிழந்த கூலித்தொழிலாளி தாக்கியதால் மரணம் அடைந்தாரா? என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஈரோடு  பெரியசேமூர் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன் (52). விவசாய கூலி  தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக ஈரோடு எல்லப்பாளையம் சதாசிவம் என்ற  ராசுகுட்டி(53) என்பவரது தோட்டத்தில் வேலை செய்துள்ளார். கடந்த 16ம் தேதி  வரதராஜன், சதாசிவத்திடம் வேலை செய்ததற்கான கூலியை கேட்டுள்ளார். அப்போது,  சதாசிவம் தோட்டத்தில் மாயமான மண் வெட்டி குறித்து கேட்டதால், இருவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த சதாசிவம், வரதராஜனை  தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நேற்று முன்தினம் காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஈரோடு அரசு  மருத்துவமனையில் வரதராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, சதாசிவம்  தாக்கியதால் வரதராஜன் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி  வருகின்றனர். போலீசார் கூறுகையில், ‘‘வரதராஜன் உடலில் ரத்தக்காயங்கள் ஏதும்  இல்லை, இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பிற்கான காரணம்  கண்டறிந்த பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: