ஈரோடு, செப். 21: ஈரோட்டில் திடீரென உயிரிழந்த கூலித்தொழிலாளி தாக்கியதால் மரணம் அடைந்தாரா? என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ஈரோடு பெரியசேமூர் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன் (52). விவசாய கூலி தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக ஈரோடு எல்லப்பாளையம் சதாசிவம் என்ற ராசுகுட்டி(53) என்பவரது தோட்டத்தில் வேலை செய்துள்ளார். கடந்த 16ம் தேதி வரதராஜன், சதாசிவத்திடம் வேலை செய்ததற்கான கூலியை கேட்டுள்ளார். அப்போது, சதாசிவம் தோட்டத்தில் மாயமான மண் வெட்டி குறித்து கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த சதாசிவம், வரதராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது.