ஈரோடு, செப். 21: தனது மதுப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த தொழிலாளி, மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தியூர் அடுத்துள்ள ஒலகடம், மும்மிரிரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் செளந்தர்ராஜன் (38). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால், குடும்பத்தில் தினமும் தகராறு இருந்து வந்தது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.