மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஈரோடு, செப். 21:  தனது மதுப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த தொழிலாளி, மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  அந்தியூர் அடுத்துள்ள ஒலகடம், மும்மிரிரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் செளந்தர்ராஜன் (38). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால், குடும்பத்தில் தினமும் தகராறு இருந்து வந்தது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனியாக வசித்து வந்த செளந்தர்ராஜன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுவில் எலிபேஸ்ட் கலந்து குடித்து வாந்தி எடுத்து வந்துள்ளார். இதை கண்ட பெற்றோர், செளந்தர்ராஜனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செளந்தர்ராஜன் நேற்றுமுன்தினம் இறந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: