திருச்சி, செப். 20: திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருச்சி தீரன் நகர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டிபுதூர் ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, போலீசார் நேற்று முன்தினம் தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்ற சோமரசம்பேட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தீரன்நகர் அருகே கஞ்சா விற்றதாக மயிலாடுதுறையை சேர்ந்த வினோத்குமார்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.