கடலூர், செப். 20: பண்ருட்டி அருகே உள்ள ஒரு இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையிலான போலீசார், சேலம்- பண்ருட்டி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் அரிசி ஆலையின் பின்புறம் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில், 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.