பொன்னேரி: பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 2278 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை நகரமன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார். பொன்னேரி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பொன்னேரி, மணலி புதுநகர், ஞாயிறு, பெரும்பேடு, காட்டூர், திருவெள்ளைவாயல், ஆரணி, பழவேற்காடு, மெதூர், மீஞ்சூர் பகுதிகளில் 13 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.