காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: எல்ஐசி அறிவிப்பு

சென்னை: எல்.ஐ.சி. நிறுவனம், பாலிசிதாரர்களின் காலாவதியான தனி நபர் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க, சிறப்பு முகாம் ஒன்றை 17.08.2022 முதல் 21.10.2022 வரை நடத்துகிறது. தங்களது யூலிப் பாலிசிகளை தவிர மற்ற அனைத்து பாலிசிகளையும் இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாமில், தாமத கட்டண சலுகையுடன் புதுப்பித்துக்கொள்ளலாம். இதன் மூலம் செலுத்தப்படாத முதல் தவணை ப்ரீமிய தேதியில் இருந்து 5 வருடங்களாக ப்ரீமியம் செலுத்தப்படாத அனைத்து பாலிசிகளையும் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்க முடியும்.

மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு, காப்பீட்டு பாதுகாப்பை மீண்டும் பெறும் வகையில் தாமதக்கட்டணத்தில் 100% சலுகை அளிக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனை தேவைகளில் எவ்வித சலுகையும் இல்லை. பாலிசியை புதுப்பிக்கும் தேதியில், பாலிசி காலம் முடிவடையாத ப்ரீமியம் செலுத்தும் காலவரையில் உள்ள அனைத்து பாலிசிகளையும் (யூலிப் பாலிசிகள் தவிர) இந்த முகாம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

எதிர்பாராத விதமாக ஏற்படும் இறப்பின் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பினை எதிர்கொள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உதவுகின்றன. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து காப்பீட்டு பாதுகாப்பினை தொடர்ந்து பெற்று குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பாதுகாத்திட எல்.ஐ.சி. தங்களது பாலிசிதாரர்களுக்கு அளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாம்.

Related Stories: